• May 22, 2025
  • NewsEditor
  • 0

அரக்கோணம்: கல்​லூரி மாணவிக்கு ஆதர​வாக​வும், திமுக அரசைக் கண்​டித்​தும் அரக்​கோணத்​தில் அதி​முக​வினர் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்டனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்​தவர் தெய்வா (எ) தெய்​வச்​செயல்​(40). அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர். அரக்​கோணம் அடுத்த பரித்​திபுத்​தூரைச் சேர்ந்​தவர் ப்ரீத்​தி(21). கல்​லூரி மாண​வி.ஏற்​கெனவே திரு​மண​மான இவர், கருத்து வேறு​பாடு காரண​மாக கணவரைப் பிரிந்து வாழ்​கிறார்.

இந்​நிலை​யில், ப்ரீத்​தியை சில மாதங்​களுக்கு முன்பு தெய்வா சந்​தித்​து, அவரைக் காதலிப்​ப​தாக​வும், திரு​மணம் செய்ய விரும்​புவ​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, கடந்த ஜன. 30-ம் தேதி அவர்​களுக்கு திரு​மணம் நடை​பெற்​றது. இரு​வரும் அரக்​கோணத்​தில் வசித்து வந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *