• May 21, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (மே.21) விநாடிக்கு 12,819 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 6 நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி, 16-ம் தேதி 3,306 கன அடியும், 17-ம் தேதி 3,479 கன அடியும், 18-ம் தேதி 4,764 கன அடியும், 19-ம் தேதி 6,233 கன அடியும், நேற்று (மே.20) விநாடிக்கு 9,683 கன அடியாக இருந்த நிலையில் இன்று (மே.21) விநாடிக்கு 12,819 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *