
மதுரை: மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வாகன பராமரிப்பு உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சித்ரா உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ‘அவர் லேண்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது. மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு 450 முதல்நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள், 15 இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.