
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் அபுஜ்மத் காடுகளில் நடந்த ஒரு தீவிர மோதலில் பசவராஜு என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் முக்கிய திருப்புமுனை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் பொதுச் செயலாளர் பசவராஜு, அபுஜ்மத் காடுகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளில் இவரும் ஒருவர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய மாவோயிஸ்ட் எதிர்ப்பு வெற்றிகளில் ஒன்றாகும்.