
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுக்களை அனுப்புவது பிரதமர் மோடியின் ‘திசைத் திருப்பும் விளம்பர பயிற்சி’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், “வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளின் குழுக்களை அனுப்புவது மற்றுமொரு கவனத்தை திசைத் திருப்பும் முயற்சியாகவே நான் கருதுகிறேன். இது ஒரு விளம்பர பயிற்சி. நாங்கள் பயங்கரவாதம், பயங்கரவாத தாக்குதல், சீனா, பாகிஸ்தான் குறித்த உண்மையான பிரச்சினைகளை எழுப்புகிறோம். அரசு ஏன் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவில்லை?