• May 21, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: "பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட விரும்பும் பெருமைமிக்க இந்தியர்களான நாங்கள் செல்கிறோம். நாங்கள் கட்சியின் சார்பாகப் போகவில்லை. இந்தியா சார்பாக மற்ற நாடுகளுக்குச் செல்கிறோம்" என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்​டிய பயங்கர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி, சுப்ரியா சுலே உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் அடங்கிய தூதுக் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்தக் குழு​வினர் பிரிட்​டன், ஆப்ரிக்க நாடுகள், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *