
சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடமான வகையிலிருந்த ஒரு பயணியைத் தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் உடைமையில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 கிலோ எடையுள்ள பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது.
கஞ்சாவைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல, கடந்த ஏப்ரல் மாதம் 10 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் 3 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இப்படி திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா கடத்தி வரப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb