• May 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஹார்ட் லாம்ப் என்ற தனது சிறுகதைத் தொகுப்புக்காக ‘சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட மொழி எழுத்தாளர்’ என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். புக்கர் பரிசு வென்ற முதல் சிறுகதை தொகுப்பு இதுவாகும்.

கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தி ஆகியோர் சிறுகதைக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றனர். லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர் இந்த விருதை அறிவித்தார். சிறுகதைகளின் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தி ஆவார். அதேபோல இந்த பரிசு பெறும் ஆறாவது பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் ஆவார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *