• May 21, 2025
  • NewsEditor
  • 0

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1989-ல் திக இறக்​கும​தி​யாக திடீர் வேட்​பாள​ராக பேராசிரியர் பொன்​முடியை விழுப்​புரத்​தில் களமிறக்​கியது திமுக தலை​மை. அந்​தத் தேர்​தலில் வென்ற அவருக்கு அமைச்​சர​வை​யிலும் முக்​கிய இடமளித்​தார் கருணாநி​தி. அது முதலே பொன்​முடிக்கு பொற்​காலம் தான். குறுகிய காலத்​தில் தன்னை திமுக தலை​மைக்கு நெருக்​க​மாக்​கிக் கொண்ட பொன்​முடி, சீக்​கிரமே ஒன்​று​பட்ட விழுப்​புரம் மாவட்​டச் செய​லா​ளர் அளவுக்கு கட்​சிக்​குள் தனது செல்​வாக்கை உயர்த்​திக் கொண்​டார். இப்​படி​யெல்​லாம் திமுக-வுக்​குள் தன்னை வளர்த்​துக் கொண்ட பொன்​முடி, தற்​போது எந்​தப் பதவி​யும் இல்​லாமல் எம்​எல்ஏ என்ற ஒற்றை அடை​யாளத்​துடன் மட்​டும் நிற்​கி​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *