
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 27 ஆண்டு கால கோரிக்கை அரசியல் சதிராட்டத்தால் காலாவதியாகிக் கொண்டே வருவதாக பொதுநல அமைப்புகள் புலம்பித் தீர்க்கின்றன.
2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிந்துள்ள நிலையிலும் அதற்கான சிறு துரும்பும் நகரவில்லை. மாறாக, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது சாத்தியமில்லை என அதிகாரிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.