• May 21, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பெங்களூருவுக்கு இன்றும் (மே.21) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கெங்கேரி, ஹெச்.ஏ.எல், மாரத்தஹள்ளி, ஹென்னூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 105.5 மிமீ மழை பதிவானது. இதனால் அந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *