
புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்த இடத்திலும் இலக்குகளை குறிவைத்து இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்று உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து ராணுவத்தின் வான் பாதுகாப்பு இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் சுமேர் இவான் டி குன்ஹா கூறியதாவது: ஒட்டுமொத்த பாகிஸ்தானும் நமது தாக்குதல் எல்லைக்குள் தான் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தனது தலைமையகத்தை ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்கவா போன்ற இடத்துக்கு மாற்ற விரும்பலாம்.