
புதுடெல்லி: மும்பை – அகமதாபாத் இடையே 300 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமராக இருந்த சின்சோ அபே ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைத்தனர்.