
சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4-5 நாட்களில் தொடங்கும் என வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வட தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தெற்கு கர்நாடக உள்பகுதிகள், அதை ஒட்டியுள்ள பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.