
கோவை: தமிழகத்தில் தேசியக் கட்சிகளை தவிர்த்துவிட்டு, திராவிடக் கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஏன் வலுவான அரசியல் கட்சியாக இல்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. தமிழகத்தில் இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.