
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த இருபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியை போதித்து வருபவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள். உயர் கல்வியின் உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்காத அவல நிலை நிலவுகிறது.