
புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது 12 பேர் கரோனா சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள கரோனா சூழல் தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “புதுச்சேரியில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கரோனா பாதிப்புகளுடன் ஓரிருவர் சிகிச்சைக்கு சில நாட்களாக வந்து வீட்டுக்கும் அனுப்பப்பட்டனர்.