
சென்னை: வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.