• May 20, 2025
  • NewsEditor
  • 0

கிறிஸ்தவ நாட்​டுப்​புறக் கதையை மைய​மாக வைத்து உரு​வான படம் ‘ஞான சவுந்​தரி’. அரசன் தர்​மரின் மகள் ஞான சவுந்​தரி. அவரை கொடுமைப்​படுத்​துகிறார், அவரது சிற்​றன்​னை. ஒரு கட்​டத்​தில் தனது ஆட்​களை அனுப்​பி, ஞான சவுந்​தரியைக் காட்​டுக்​குக் கடத்​திச் சென்று கொன்​று​விடு​மாறு கூறுகிறார். அவர்​கள், ஞான சவுந்​தரி​யின் இரு கைகளை​யும் வெட்டி விட்​டுத் தப்​பிக்​கின்​றனர். உயிருக்​குப் போராடும் அவரை, வேட்​டைக்கு வரும் பக்​கத்து நாட்டு இளவரசன் பிலேந்​திரன் காப்​பாற்​றுகிறான். பிறகு அவரை திரு​மணம் செய்​து​கொள்​கிறான். இயேசு கிறிஸ்து மற்​றும் கன்னி மேரி​யின் ஆசீர்​வாதங்​களு​டன் அவர்​கள் எப்​படி மகிழ்​வாக வாழ்​கிறார்​கள் என்று கதை செல்​லும்.

நவாப் ராஜ​மாணிக்​கம் நடத்​திய மேடை நாடகத்​தைத் தழுவி இந்​தப் படம் உரு​வாக்​கப் பட்​டது. இதே கதையைத் தழுவி ஏ.நா​ராயணன் 1935-ம் ஆண்​டு, ‘ஞான சவுந்​தரி’ என்ற பெயரில் படமாக இயக்​கி​னார். அதில் பி.எஸ். ஸ்ரீனி​வாச ராவ் கதா​நாயக​னாக​வும் சரோஜினி நாயகி​யாக​வும் நடித்​தனர். அதே கதையைக் கொண்டு 13 வருடங்களுக்கு பிறகு உரு​வான இந்த ‘ஞான சவுந்​தரி’​யில் டி.ஆர்​.ம​காலிங்​கம், எம்​.​வி.​ராஜம்​மா, டி.​பாலசுப்​பிரமணி​யம், பி.ஆர்​.மங்​கலம், பி.எஸ்​.சிவ​பாக்​யம், பி.ஜி.வெங்​கடேசன் என பலர் நடித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *