
மதுரை: ”உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சர்வதேச அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது” என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் கழகம் சார்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தொடர் கல்வித் திட்டம் விழா நடந்தது. மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர், “தமிழக அரசு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனாலே, இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சர்வதே அளவிலான புள்ளி விவரங்களிலும் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து அவர்களது உடல் உறுப்புகளை பெறுவதில் சவாலானது.