
சென்னை: மின்கம்பம் மேல் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், உடனே மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் வருவதை தானாகவே துண்டிக்கும் ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்’ திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.
சென்னையில் வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவும், மற்ற இடங்களில் மின்கம்பங்கள் மேலம் செல்லும் மின்கம்பிகள் மூலமாகவும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.