• May 19, 2025
  • NewsEditor
  • 0

மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ” தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது.

rain alert

சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பெய்துள்ளது. இயல்பாகப் பெய்ய வேண்டிய மழையின் அளவு 4 செ.மீ, ஆனால் 7.4 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை (மே 20) கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்திருக்கிறார்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

அது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *