• May 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய வீடியோவை இணைத்து, கடந்த 17-ம் தேதி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *