
புதுடெல்லி: சமீபத்தில் ஏற்பட்ட போர் பதற்றங்களின்போது பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயில் பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படை எப்படி காப்பாற்றியது என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலின் போது, இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள பல நகரங்களை ஆயுதப் படைகள் துணிச்சலுடன் பாதுகாத்தன. இந்த மோதலின்போது இந்தியாவின் முக்கிய கட்டிடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வகையான வான் தாக்குதல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன.