• May 19, 2025
  • NewsEditor
  • 0

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

rain alert

தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறேன்.

மழைக் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு வெளியிடும் வானிலை எச்சரிக்கையும், முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் மக்கள் உதவி பெறுவதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்டுபாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும்” என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *