
ஓசூர்: தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கர்நாடக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.