
சென்னை: இலங்கை முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2009-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது.