
மும்பை: “என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானைவிட நரகம் மேலானது. நான் நரகத்துக்கே செல்லவே விரும்புகிறேன்.” என பாலிவுட் பிரபலம் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் நேற்று ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில், “ஒரு தரப்பினர் என்னை ‘காஃபிர்’ என்று கூறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் நிச்சயமாக நரகத்துக்கு செல்வேன் என்று அவர்கள் சாபமிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் என்னை ‘ஜிகாதி’ என்று விமர்சிக்கின்றனர். அவர்கள் என்னை பாகிஸ்தான் செல்லுமாறு கூறுகின்றனர்.