
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் அருகில் உள்ள ஜம்கந்தி என்ற இடத்தில் பிரவின் என்பவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருமண ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்தன. மணமகன் மற்றும் மணமகள் என இரண்டு பேரும் மேடைக்கு வந்தனர். உறவினர்கள் சூழ்ந்து நிற்கப் புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்கி சடங்குகள் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரவின் மணமகளுக்குத் தாலி கட்டினார். தாலி கட்டிய சிறிது நேரத்தில் பிரவினுக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது.
இது குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில நொடிகளில் பிரவின் மணமேடையில் இருந்து சரிந்து விழுந்தார்.
அவரை உறவினர்கள் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரைச் சோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார்.
கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மணமேடையில் தாலி கட்டியவுடன் மணமகன் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருந்த திருமண வீடு சில நிமிடத்தில் துக்க வீடாக மாறியது. மணமேடையில் கணவனைப் பறிகொடுத்த மணமகள் கதறி அழுத காட்சி நெஞ்சை உறுக்குவதாக இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்தியப் பிரதேசத்தில் திருமண மேடையில் மணமகள் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs