
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் எளிதாக ஏமாற்றி உள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதன்பிறகு கடந்த 7,8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது.