
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி 53 வயது பெண்ணிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்த ஃபேஸ்புக் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகானில் வசித்து வரும் 53 வயதான பெண்ணிடம் ஜூபர் ஷம்ஷாத் கான் என்பவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பரானார். அப்போது அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகிய அவர், கிரிப்டோகரன்சி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி வந்துள்ளார்.