
ஹைதராபாத்: ஹைதராபாத் சாதர்காட் பகுதியை சேர்ந்தவர் ஃபஹியுத்தீன். வியாபாரி. இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களும் துணைக்கு வீட்டில் இருந்த தனது வயதான பெற்றோருக்கு சொல்லிவிட்டு, ஃபஹியுத்தீன் மனைவியுடன் இருக்க மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, கொள்ளையர்கள் அந்த வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் குதித்தனர். அதன் பின்னர், வீட்டில் இருந்த முதியோரை ஒரு அறையில் அடைத்து தாளிட்டனர். பின்னர், வீட்டில் இருந்த 700 கிராம் தங்க நகைகளை பீரோவில் இருந்து கொள்ளையடித்தனர்.