• May 17, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். சுமார் 10 மணிநேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என முன்னாள் எம்எல்ஏ-வின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி. இவர் 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக உசிலம்பட்டி சந்தைப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கண்ணன் புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *