
சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸூம் ஆயத்த பணிகளை தொடங்கும் விதமாக அதன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.