
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களை குறிவைக்க முயன்றபோது, 600க்கும் மேற்பட்ட அந்நாட்டு ட்ரோன்கள் இந்திய பாதுகாப்புப் படைகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.