• May 16, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பின்பு, துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கும் இடையே சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் நடந்தது.

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஜீலம் நதியால் நிரம்பிய வுலர் ஏரியை புனரமைக்க முயற்சி செய்யும் துல்புல் திட்டம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு திட்டம் நிறுத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு ஏப்.23-ம் தேதி சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வியாழக்கிழமை கோரியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *