• May 16, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (மே 16) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ராமதாஸ் பேரனும் மாநில இளைஞர் அணி தலைவருமான முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *