
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி ஆகிறார்.
ஆகஸ்ட் 31, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பேலா எம்.திரிவேதி பதவியேற்றார். அவருடன் மூன்று பெண்கள் உட்பட 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியான அவர், மூன்றரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.