
மதுரை: “இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரின் விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஓரணியில் வந்தால் இதை நிறைவேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால், கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஓரணியில் திரள முடிவெடுக்க வேண்டும். இதை தவிர்த்து கட்சித் தலைவர்கள் அவரவர்கள் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.