• May 16, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

போக்சோ

தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடைமுறைக்காக போலீஸார் தயாரானபோது முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், முருகனுக்கு உடல் நலம் தேறியதை அடுத்து இன்று அவரை மருத்துவ பரிசோதனை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைகளில் போலீஸார் ஈடுபட்டனர்.

போக்சோ

இதனை அறிந்த முருகன் யாரும் எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தியதோடு, முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக அவசர சிகிச்சைக்கு மாற்றினர். இந்த சம்பவத்தால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *