
இவரை எல்லாம் ஸ்டாலின் அத்தனை எளிதில் கைவைக்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த துரைமுருகனின் வேலூர் மாவட்ட திமுகவினர், அவரது இலாகா மாற்றத்தால் சற்றே ஷேக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது மூத்த அமைச்சர் துரைமுருகன் தனித்த செல்வாக்குடன் வலம் வந்தார். தனது அணுகுமுறைகளால் அடிக்கடி அதிருப்திகளுக்கு ஆளானாலும் கருணாநிதி அவரை கடிந்து கொண்டதில்லை. காரணம், நெருக்கடியான நேரங்களில் கட்சிக்காக துரைமுருகன் தந்திருக்கும் பங்களிப்பு அப்படி. ஆனால், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் துரைமுருகனுக்கான இருப்பு சரியத் தொடங்கியது. அதைத் தெரிந்து கொண்டு பல நேரங்களில் அவரும் வெளிப்படையாகவே புலம்பவும் ஆரம்பித்தார். “இன்பநிதி அமைச்சரவையிலும் இந்த அவையில் இருப்பேன்” என்று சொன்னதெல்லாம் அதன் வெளிப்பாடு தான்.