
சென்னை: இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்தில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் எனும் இனிப்பை வாங்கியுள்ளார்.