• May 15, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: “தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் 182 இடங்களில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்கு நெல்லை பொதிகை தமிழ் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு வள்ளுவ சுடர்மணி என்ற விருதை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கைகள் சரியாக இல்லை என திமுக உள்ளிட்ட அப்போதைய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அரசின் மீது நம்பிக்கை இல்லாததை காட்டியதால் தான் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *