
பாட்னா: தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "உங்களைச் சந்திக்க வேண்டும், உங்கள் குறைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வர முடிவெடுத்தேன். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு, நான் இங்கு வருவதையும் உங்கள் முன் பேசுவதையும் தடுக்க முனைந்தது.