
வண்டலூர்: காவல் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று தொடங்கியது மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். இன்று நடக்கும் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பெண் காவலர்களை கவுரவிக்கும் வகையில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடந்தது. மாநாட்டின் கருப்பொருள் ‘பெண் காவல்துறை மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற கரும்பொருளுடன் நடைபெற்ற மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார்.