
புதுடெல்லி: பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அந்நாட்டு விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 50 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 10-ம் தேதி இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானப் படை, ராணுவத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.