
புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு உதவ உளவாளிகளாக செயல்படுபவர்களை ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்கின்றனர். இவர்கள் கிராமம், நகரங்களில் சாதாரண பொதுமக்கள் போல் ஊடுருவி வாழ்கின்றனர். இவர்களில் படிப்பறிவு இல்லாதவர்கள் முதல் அனைத்து வகைப் பிரிவினரும் உள்ளனர்.
இந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு உதவிகளை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து மாநில அரசு ஒழித்துள்ளது.