
சென்னை: ஜெர்மனியில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளின் செலவினத்துக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கான தங்குமிட கட்டணம், விமான கட்டணம், உணவு உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.