
சென்னை: “பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ மாநாட்டில் பேசிய போது ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தரம் மற்றும் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் சர்வதேச தர சவால்களை எதிர்கொள்ளவும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களாகவும், தரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும் மாற்றப்படும் என தெரிவித்தார்.