• May 14, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் சேலத்தில் இன்று (மே 14) காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகரில் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக, வெங்கடாசலம் (91) அவரது இல்லத்தில் இன்று மதியம் காலமானார். மறைந்த வெங்கடாசலத்தின் மனைவி பேபி சரோஜா , மூத்த மகள் பைங்கிளி, கடைசி மகன் அருட்புனல் ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். மகள்கள் பைங்கிளி, இன்சுவை ஆகியோர் கல்லூரி பேராசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *